×
Wednesday 1st of October 2025

அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில், திருவாதவூர்


thiruvathavur-thirumarainathar-temple-gopuram

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் திருக்கோவில்

சிவஸ்தலம் பெயர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோவில்
மூலவர் திருமறைநாதர், வேதபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் திருமறைநாயகி, வேதநாயகி
தல விருட்சம் மகிழ மரம்
தீர்த்தம் பைரவதீர்த்தம்
புராண பெயர் வாதவூர்
ஊர் திருவாதவூர்
மாவட்டம் மதுரை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

manickavasagar

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருமறைநாயகி அம்மன் சமேத திருமறைநாதர் திருக்கோவில், திருவாதவூர். (மாணிக்கவாசகர் அவதரித்த தலம்) சைவ சந்நிதிகளுள் மிகவும் முக்கியமான தலம். இக்கோவில் சுயம்பு சிவலிங்கத்தை கொண்டது மட்டுமல்லாமல், நால்வர் சைவ நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பெருமான் அவதரித்த புனித தலமாகவும் புகழ்பெற்றது.

திருவாதவூர் கோவில் வரலாறு

புராணக் கதைகள் படி, இத்தலம் ஒருகாலத்தில் ஒரு பெரிய ஏரி பகுதியாக இருந்தது. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட போரின் போது, தேவர்களை காப்பாற்றிய திருமாலை அசுரர்கள் தாக்க முயன்றனர். அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக, திருமால் பிருகு முனிவரின் மனைவியை தனது சக்கராயுதத்தால் தண்டித்தார். இதனால் முனிவர் சாபம் இட, அந்த சாபத்தை நீக்குவதற்காக திருமால் ஆலவாய் அழகனை தரிசித்தார்.

அந்த சமயம், ஒரு பசு தாமரைப்பூ மீது பாலை சுரந்த இடத்தில் சுயம்பு சிவலிங்கம் வெளிப்பட்டது. திருமால் அதை பூஜித்து வணங்க, சாபவிமோசனம் பெற்றார். பின்னர் இந்த தலம் புகழ் பெற்று, அழகிய ஆலயமாக வளர்ந்தது.

thiruvathavur-thirumarainathar-temple-inside

திருவாதவூர் கோவில் அமைப்பு

திருக்கோவில் தெற்கு காளஹஸ்தி என அழைக்கப்படும் சிறப்பை உடையது.

  • மூலவர் – திருமறைநாதர் (சுயம்பு லிங்கம், பசுவின் குளம்படி சின்னத்துடன்)
  • அம்மன் – திருமறைநாயகி
  • தல விருட்சம் – மகிழ மரம்
  • தீர்த்தங்கள் – பைரவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், அக்னி தீர்த்தம் உட்பட ஏழு தீர்த்தங்கள் (சப்த தீர்த்தம்)
  • சனீஸ்வர பகவான் சன்னதி – ஒரு காலை மடக்கி வாகனத்தில் அமர்ந்திருக்கும் தனிச்சிறப்பு.

கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் கோவிலாக்கப்பட்டுள்ளது. விநாயகர், பைரவர், கபிலர் போன்ற தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.

thiruvathavur-thirumarainathar-temple-god

திருவாதவூர் கோவில் வழிபாடு மற்றும் நன்மைகள்

இந்த கோவில் வாத நோய்கள் குணமடைவதற்கான பிரசித்தி பெற்ற தலம்.

கை, கால் முடக்கம், பக்கவாதம் போன்ற வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணையை எடுத்துச் சென்று உடலில் தேய்த்தால் குணமடைவார்கள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

குழந்தைப்பேறு வேண்டுவோர் இங்கு வழிபடுகின்றனர்.

கடன் தொல்லை, தொழில் தடைகள் நீங்கும். குறிப்பாக இரும்பு, கரி தொடர்பான தொழில்கள் விருத்தியடையும்.

பைரவரை வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற துஷ்டசக்திகள் விலகும்.

சனீஸ்வர பகவானை வழிபட்டால் சனி தோஷம் குறையும், தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும்.

மாணிக்கவாசகர் பெருமான் பிறந்த இடம் என்பதால், திருவாசகப் பாராயணம் இங்கு மிக முக்கியம்.

திருவாதவூர்த் தலம் பாண்டிய நாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.

thiruvathavur-thirumarainathar-temple-silamboli-place

திருவாதவூர் கோவில் திருவிழாக்கள்

  • வைகாசி பிரம்மோற்சவம் (10 நாள்) – திருக்கல்யாணம், திருத்தேர் உலா.
  • சித்திரை வரதப்பிடாரி அம்மன் உற்சவம்.
  • ஆனி மாத ஆனி மக உற்சவம்.
  • ஆவணி மூல திருவிழா – மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல்.
  • கார்த்திகை திருவிழா, டோலோற்சவம்.
  • மாசி மகா சிவராத்திரி.

இத்தலத்தை தரிசிப்பதன் மூலம் பாவநிவிர்த்தி, ஆரோக்கியம், செல்வம், குடும்ப சந்தோஷம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

திருவாதவூர் கோவில் திறக்கும் நேரம்

திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை மற்றும் மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். பிரதோஷம் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

thiruvathavur-thirumarainathar-temple-manickavasagar

திருவாதவூர் கோவிலுக்கு எப்படி செல்வது?

மதுரை – மேலூர் சாலையில் ஒத்தக்கடை அடைந்து அங்கிருந்து திருமோகூர் (108 திவ்யதேசங்களில் ஒன்று) செல்லூம் சாலையில் திருமோகூரைக் கடந்து திருவாதவூரை சென்று அடையலாம். மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவு. திருச்சியில் இருந்து வருபவர்கள் திருச்சி – மதுரை சாலையில் மேலூர் அடைந்து அங்கிருந்து வாதவூர் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ, சென்றால் வாதவூர் திருமறைநாதர் ஆலயத்தை அடையலாம்.

சாலை மார்க்கம்: மதுரை நகரில் இருந்து 25 கி.மீ தொலைவில், மதுரை – திருச்சி சாலையில் திருவாதவூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

பேருந்து வசதி: மதுரை பேருந்து நிலையத்திலிருந்து திருவாதவூர் நோக்கி அடிக்கடி பஸ்கள் செல்கின்றன.

ரயில்: மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள பெரிய ஸ்டேஷன். அங்கிருந்து டாக்ஸி/ஆட்டோ எளிதில் கிடைக்கும்.

திருவாதவூர் கோவில் முகவரி

அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில்,
திருவாதவூர், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்,
தமிழ்நாடு – 625110.

தொடர்பு எண்கள்: 📞 +91 452 234 4360, 63826 80960

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

20-famous-temples-near-chennai
  • செப்டம்பர் 20, 2025
சென்னைக்கு அருகிலுள்ள பிரபல கோவில்கள் – தரிசிக்க வேண்டிய 20 தலங்கள்
avoor-pasupatheeswarar-temple-entrance
  • செப்டம்பர் 14, 2025
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
sivakozhundeeshwarar-temple-theerthanagiri
  • ஆகஸ்ட் 30, 2025
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்