- ஏப்ரல் 27, 2025
🛕 புனித அக்னியை தன் தலையில் ஏந்தி, நிர்வாண கோலத்தில் சூலத்தை கரங்களில் ஏந்தியவாறு, நாய் வாகனத்துடன் காட்சி தருபவர், காலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் காலபைரவராவார்.
🛕 கால-பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்:
1. காலபைரவரை வழிபட்டால் கெட்ட காலத்தில் தவிப்பவர்களுக்கும் நற்காலம் பிறக்கும்.
2. கண்திருஷ்டிகள் அனைத்து ஒழியும்.
3. வீட்டின் முன் கதவின் மேல் காலபைரவரின் திருவுருவப் படம் இருந்தால் தீயசக்திகள், கண் திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள் அகலும்.
4. மேலும் ஏவல் பில்லி சூனியம் அண்டாமல் இருக்கும்.
5. காலபைரவருக்கு வில்வம்,செவ்வரளி மலர் சூட்டி தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் கைகூடும்.
6. எமபயம் நீக்கி சுகவாழ்வு அருள்வார்.
7. வறுமை நிலை மாறி செல்வம் சேரும்.
8. நோய், திருட்டு முதலியவை நீங்கும்.
🛕 காலபைரவரை நாமும் வழிபட்டு வாழ்வில் வெற்றி பெருவோம்!
நன்றி – திரு.வே.முகிலரசன்.
Also, read