×
Tuesday 28th of April 2026

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு


thiruverkadu-vedapureeswarar-temple-entrance-gopuram
சிவஸ்தலம் பெயர் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
மூலவர் வேதபுரீஸ்வரர் (சுயம்பு லிங்கம்), வேற்காட்டீசர்
அம்மன்/தாயார் பாலாம்பிகை (வேற்கண்ணி அம்மை)
தல விருட்சம் வெள்வேல மரம்
தீர்த்தம் வேலாயுத தீர்த்தம், வேத தீர்த்தம், பாலிநதி
புராண பெயர் திருவேற்காடு
ஊர் திருவேற்காடு
மாவட்டம் திருவள்ளூர் (சென்னை)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு, தேவாரப் பாடல் பெற்ற 276 பதியங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தை “ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி” என்ற பதிகத்தால் பாடியுள்ளார். இது தொண்டை நாட்டின் 23வது தேவாரத் தலம். சுயம்பு லிங்கத்தின் பின்புறம் சிவன்-பார்வதி திருமணக் கோலத்தில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

thiruverkadu-vedapureeswarar-temple-moolavar

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் தல வரலாறு

இமயமலையில் சிவன்-பார்வதி திருமணம் நடந்தபோது, உலகம் சமநிலை பெற அகத்திய முனிவர் தென்திசை நோக்கி அனுப்பப்பட்டார். அவருக்கு திருவேற்காட்டில் தான் இறைவன் தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். இதனால் இத்தலம் காசிக்கு மேல்பட்ட ஸ்தலமாக கருதப்படுகிறது. காசியைப் போலவே இங்கும் பாலாறு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது.

பிரளய காலத்தில் சிவன், நான்கு வேதங்களையும் (ரிக், யஜூர், சாம, அதர்வண) வெள்வேல் மரங்களாக நிற்கச் செய்து தன்னை வழிபடச் சொன்னார். பிரளயம் முடிந்தபின் அந்த மரங்களே இங்கு நின்று லிங்கத்தை வழிபட்டதால் “திருவேற்காடு” என்ற பெயர் உருவானது.

சூரசம்ஹாரத்திற்கு முன்பாக முருகப் பெருமான் வேல் வைத்துப் பூஜித்த இடமும் இதுவே. முருகன் வேலாயுத தீர்த்தத்தை உருவாக்கி வழிபட்டு மன்னிப்பு பெற்றார். இதனால் முருகன் சன்னதியில் ஒரு சிவலிங்கம் (இங்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு) அமைந்துள்ளது. முருகன் வேல் இல்லாமல் வில்-அம்புடன் மயில் மீது நிற்கும் அழகிய சிற்பமும் இங்கு உள்ளது.

thiruverkadu-vedapureeswarar-temple-balambika-amman

வேதபுரீஸ்வரர் கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம். மூன்று பிரகாரங்கள். மூலவர் கருவறை விமானம் “கஜப்ருஷ்ட” வடிவில் அமைந்துள்ளது. மூலலிங்கத்தின் பின்புறம் சிவன்-பார்வதி திருமணச் சிற்பம். அம்மன் சன்னதி தெற்கு நோக்கி. நவகிரக சன்னதி அஷ்டகோண பத்ம பீடத்தில் (நவகிரக தோஷ நிவாரணத்துக்கு சிறப்பு). மூர்க்க நாயனார் தனி சன்னதி, 63 நாயன்மார் சிலைகள், காசி விஸ்வநாதர்-விசாலாக்ஷி, அனபய சோழன் சிலைகள் உள்ளன. கோஷ்ட தெய்வங்கள்: கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை.

thiruverkadu-vedapureeswarar-temple-shivan

வேதபுரீஸ்வரர் கோவில் சிறப்பு

  • 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் பிறந்த ஊர் இந்த திருவேற்காடு ஆகும்.
  • திருமணத் தடை நீங்கும் பரிகாரத் தலம் (அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளியது).
  • நவகிரக தோஷம் நீங்கும் சிறப்பு.
  • ஞாயிறு தோறும் தீர்த்தத்தில் நீராடினால் தோல் நோய்கள் நீங்கும்.
  • பாலாம்பிகையுடன் திருவலிதாயம் ஜகதாம்பிகை, திருவாரூர் வடிவாம்பிகையை ஒரே நாளில் தரிசித்தால் இம்மை மற்றும் மறுமை பயன் கிடைக்கும்.
  • ஜோதிடம் கற்றவர்களுக்கு, ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கு சிறப்பு அருள்.

திருமணம் கைகூடாதவர்கள் இக்கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை:

ஐந்து வாரங்கள்: தொடர்ந்து ஐந்து வாரங்கள் கோவிலுக்கு வர வேண்டும்.

மாலைகள்: ஒவ்வொரு வாரமும் இரண்டு மாலைகள் மற்றும் ஒரு அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

வழிபாடு: இரண்டு மாலைகளையும் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஒரு மாலையைத் திரும்பப் பெற்று, கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை 5 முறை வலம் வர வேண்டும்.

வீட்டில் வைத்தல்: அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று உங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

அடுத்த வாரம்: அடுத்த வாரம் செல்லும்போது பழைய மாலையை எடுத்துச் சென்று அங்கிருக்கும் வில்வேல மரத்தில் (ஸ்தல விருட்சம்) சேர்த்துவிட வேண்டும். மீண்டும் புதிய 2 மாலைகளுடன் வழிபாட்டைத் தொடர வேண்டும்.

thiruverkadu-vedapureeswarar-temple-board

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் திருவிழாக்கள்

வேதபுரீஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்

திருவேற்காடு அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் காலை காலை 06:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும்.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து சென்னை-பூவிருந்தவல்லி சாலையில் 17 கி.மீ. சென்று வேலப்பன் சாவடியில் வலதுபுறம் திரும்பி 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கி S52 அல்லது 150 பேருந்தில் நேராக கோவில் வாசலுக்கு வரலாம். திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. நடை அல்லது ஆட்டோ. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலிலிருந்து 1 கி.மீ. தூரம்.

thiruverkadu-vedapureeswarar-temple-pond

வேதபுரீஸ்வரர் கோவில் முகவரி

அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவேற்காடு அஞ்சல்,
திருவள்ளூர் மாவட்டம் – 600 077.

தொடர்பு எண்: 044-2627 2430, 044-2627 2487

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thuravikkadu muthumariamman kovil entrance
  • மார்ச் 28, 2026
துறவிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
thiruverkadu-devi-karumariamman-temple-gopuram
  • மார்ச் 5, 2026
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
aanmeegam-lord-shiva
  • பிப்ரவரி 20, 2026
சிவனை வேண்டி சில வரிகள்
×

🔕 விளம்பரமில்லா ஆன்மீக அனுபவம்

விளம்பரங்கள் இல்லாமல் ஆன்மீக உள்ளடக்கங்களை வாசிக்க விரும்புகிறீர்களா?

₹949 1 Year
₹649 6 Months
₹349 3 Months
₹149 1 Month
WhatsApp மூலம் Subscribe செய்யவும்
🔕