×
Friday 25th of July 2025

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு


Last updated on ஜூலை 15, 2025

srirangam temple gopuram images

ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வரலாறு

திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில்
மூலவர் ரங்கநாதர்
உற்சவர் நம்பெருமாள்
அம்மன் ரங்கநாயகி/ரங்க நாச்சியார்
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் சந்திர தீர்த்தம் & 8 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை பாஞ்சராத்திரம்
புராண பெயர் திருவரங்கம்
ஊர் ஸ்ரீரங்கம்
மாவட்டம் திருச்சி

Srirangam Ranganathaswamy Temple History in Tamil

திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், பக்தர்களின் புகலிடமாக விளங்குகிறது. இங்கு விஷ்ணு தன் பக்தர்களுக்கு சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கம் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும்.

விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்த ஸ்ரீரங்கம் கோவிலானது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ளது. கிமு 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆழ்வாரால் எழுதப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீரங்கம் கோவிலானது புகழப்பட்டுள்ளது. இந்தத் திருத்தலம் அழகிய மற்றும் கட்டிடக்கலை அதிசயங்கள் கொண்டு, திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டுள்ள இந்துக் கோவில் ஆகும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் 156 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் 4116 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித்தன்மை வாய்ந்த ஏழு பிரகாரம் உடைய இந்த கோவிலின் 21 கோபுரங்கள் 72 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மார்கழி மாதத்தில் மட்டும் 10 லட்சம் பக்தர்கள் வந்து விஷ்ணுவை வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயம் வைணவர்களால் தென்காலை வழிபாட்டுமுறை பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. “திருவரங்க திருப்பதி, பெரிய கோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம்” எனவும் இந்த கோவில் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

srirangam namperumal gopuram

Srirangam Temple Deity

விஷ்ணு பெருமாள் தனது பக்தர்களுக்கு ஆதிசேஷ வடிவில்‌ சுருண்ட பாம்பின் மீது படுத்துக்கொண்டு ரங்கநாதராக காட்சி தருகிறார். இந்த விஷ்ணு சிலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், வழக்கமாக பிரம்மாவின் தொப்புளில் இருந்து எழும் தாமரை காணவில்லை. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பிரம்மா விஷ்ணுவை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பெருமாள் பரலோகத்தில் இருந்துகொண்டு அண்டத்தில் உள்ள அனைத்தையும் பாதுகாக்கின்றார். ரங்கநாத சுவாமி – “பெரியபெருமாள், நம் பெருமாள், அழகிய மணவாளன் என்ற பெயர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

மேலும் ஸ்ரீரங்கத்தில் துணை கோயில்களாக விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடன், அனுமான், ஆண்டாள், 12 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் மற்றும் வேதாந்த தேசிகர்கள் அருள்புரிகின்றனர்.

ranga nachiyar srirangam

Srirangam Ranganathar Temple

வரலாற்று ரீதியாக இந்த கோவிலானது சங்ககாலத்தில் (கிமு 3ம் முதல் 45ம்) நூற்றாண்டைச் சேர்ந்தது. இருந்தபோதிலும் இந்த கோவில் முழுமையான கட்டமைப்பை பூர்த்தியடைய உறுதுணையாக இருந்தவர்கள் – உறையூர் சோழர்கள், பழையாறை சோழர்கள், தஞ்சாவூர் சோழர்கள், மேற்கின் கொங்கு அரசர்கள், தெற்கின் பாண்டியர்கள் மற்றும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசர்களும். அந்தக் காலத்தில் உள்ள மக்கள் இந்த கோவில் கட்டமைப்பில் பெருமளவு உதவி செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஏழு பிரகாரங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக சுற்றுமதில்களைக் கொண்டு 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 21 சித்திர கோபுரங்கள் புராண சித்திரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்து மதத்தின் புராண வரலாறு மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக இந்த கோபுரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த திருத்தலத்தில் ஏழு பிரகாரங்களை தவிர 21 பெரிய கோபுரங்கள், கோவில் வளாகத்தில் 50 துணை கோவில்கள், 9 புனித  குளங்கள், விமானம், மற்றும் எண்ணிலடங்கா நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. உள்ளார்ந்து இருக்கும் நான்கு பிரகாரங்களிலும் விஷ்ணுவை வழங்குவதற்காக வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

7 Prakarams – 7 பிரகாரங்கள்

  • முதல் பிரகாரம் – தர்மவர்மன் திருச்சுற்று
  • இரண்டாம் பிரகாரம் – ராஜ மகேந்திரன் திருவீதி
  • மூன்றாம் பிரகாரம் – குலசேகரன் திருவீதி
  • நான்காம் பிரகாரம் – ஆலிநாடன் திருவீதி
  • ஐந்தாம் பிரகாரம் – அகளங்கன் திருவீதி
  • ஆறாம் பிரகாரம் – திருவிக்ரமன் திருவீதி
  • ஏழாம் பிரகாரம் – சித்திரை திருவீதி

srirangam seven gopuram

Srirangam Temple Timings

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது, விஷ்ணு பெருமாள் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.

Srirangam Temple Pooja Timings

விவரம் நேரம்
Viswaroopa seva / விஸ்வரூப சேவா 06:00 am to 07:15 am
Pooja time ( No Darshan) / பூஜை 07:15 am to 09:00 am
General Darshan Timings / பொது தரிசனம் 09:00 am to 12:00 am
Pooja time ( No Darshan) / பூஜை 12:00 am to 01.15 pm
Darshan Timings / பொது தரிசனம் 01:15 pm to 06:00 pm
Pooja time ( No Darshan) / பூஜை 06:00 pm to 06:45 pm
Darshan Timings / பொது தரிசனம் 06:45 pm to 09:00 pm

Festivals in Srirangam Temple

ஸ்ரீ ரங்கம், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் ஆண்டுக்கு 250 நாட்கள் இந்து திருவிழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு திருவிழாவும் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா நடைபெறும்போது இந்த கோவில் ஒரு அண்டவெளி அரங்காக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

முக்கிய திருவிழாக்கள்:

  • வைகுண்ட ஏகாதேசி
  • பிரம்மோற்சவம்
  • ஜேஷ்டாபிஷேகம்
  • பவித்ரோத்சவம்
  • ஸ்ரீ ஜெயந்தி
  • ஊஞ்சல்
  • சித்திரைத் தேர்

srirangam ranganathar

Also read,

Srirangam Ranganathaswamy Temple Address

Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006

Srirangam Temple Contact Number: +91 4312432246

Srirangam Temple Official Website: https://srirangam.org/


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்