×
Saturday 25th of October 2025

ஆஞ்சநேயர் துதி


Last updated on ஜூன் 24, 2025

hanuman thuthi in tamil

Hanuman Thuthi in Tamil

அனுமன் துதி பாடல்கள்

மிகச் சிவந்த முகமுடைய வானரன்
…..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்
…..பாரிசாத மர நிழல் வாழ்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்
…..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.

அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்
……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில்
சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன்
……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்
……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்

சித்த வேகமும் வாயுவின் வேகமும்
……சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்
……புகழி ராமனின் தூதுவன் வாயுவின்
சேயன் வானர சேனையின் முக்கியன்
……சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.

யாரும் செய்வதற் கேயரி தானதை
…..ஐயநீ செய்குவை ஏதுனக் கரியது?
பாரில் என்செயல் நீநிறை வேற்றிவை.
…..பரிவின் ஆழிநீ இராம தூதனே!
ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!
…..ஆஞ்சநேயனே! அஞ்சலி செய்கிறேன்!

அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ்
…..ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை
…..வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின்
……அனுபவத் தினில் இவைபெற லாகுமே!


 

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

வணக்கம்! நான் உமா, சென்னையில் வசித்து வருகிறேன். வேதியியல் துறையில் முதுநிலை பட்டம் (M.Sc. Chemistry) பெற்றுள்ளேன், ஆனால் என் உள்ளார்ந்த ஆர்வம் ஆன்மிகம் மற்றும் தமிழ் கலாசாரத்தின் ஆழமான பாரம்பரியத்தில் உள்ளது.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

sri-krishna-nanda-nandanashtakam
  • அக்டோபர் 5, 2025
ஶ்ரீ நந்த நந்தனாஷ்டகம்
lord-krishna
  • ஆகஸ்ட் 21, 2025
குறை ஒன்றும் இல்லை பாடல்
chellatha-mariatha-amman
  • ஆகஸ்ட் 6, 2025
செல்லாத்தா செல்ல மாரியாத்தா: ஒரு பக்திப் பரவசப் பாடல்!