×
Saturday 1st of August 2026

குரு பாதுகா ஸ்தோத்திரம் (Guru Paduka Stotram)


Last updated on ஜூன் 24, 2025

guru shishya tradition

 

Guru Paduka Stotram Lyrics & Meaning Tamil

குரு பாதுகா பாடல் வரிகள் & விளக்கம்

குரு பாதுகா ஸ்தோத்திரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் குருவின் முக்கியத்துவத்தை போற்றும் ஒரு பாடலாகும், மேலும் இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதன் மூலம் குருவின் அருளைப் பெற முடியும். இது ஒரு குருவின் பல குணங்களைப் போற்றுகிறது; அவரது வழிகாட்டுதலின் கீழ் வாழ்பவரின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்குகிறது. குரு பாதுகா ஸ்தோத்திரத்தை உச்சரித்து, உங்கள் குருவைக் கண்டு, அவருடைய அருளைப் பெற்று, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.

Guru Paduka Stotram Lyrics in Tamil

கு³ரு பாது³கா ஸ்தோத்ரம்

அனந்தஸம்ஸார ஸமுத்³ரதார நௌகாயிதாப்⁴யாம் கு³ருப⁴க்திதா³ப்⁴யாம் ।
வைராக்³யஸாம்ராஜ்யத³பூஜனாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 1 ॥

விளக்கம்: முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இது; என் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவது; இதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

கவித்வவாராஶினிஶாகராப்⁴யாம் தௌ³ர்பா⁴க்³யதா³வாம் பு³த³மாலிகாப்⁴யாம் ।
தூ³ரிக்ருதானம்ர விபத்ததிப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 2 ॥

விளக்கம்: பரிபூரண பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக்கடலுமாம் இது; துரதிருஷ்டத்தீயினை போக்கும் நீர் இந்த பாதுகை; சரணாகதி அடைந்தவர்களின் துயரங்களை அழிக்கவல்லது; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

நதா யயோ: ஶ்ரீபதிதாஂ ஸமீயு: கதா³சித³ப்யாஶு த³ரித்³ரவர்யா: ।
மூகாஶ்ர்ச வாசஸ்பதிதாஂ ஹி தாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 3 ॥

விளக்கம்: தன்னை வணங்கி துதிப்பவர்களை; அவர்கள் ஏழைகள் என்றாலும் கூட, செல்வந்தர்களாக்கும்; ஊமைகளைக்கூட சிறந்த சொற்பொழிவாளராக்கும்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

நாலீகனீகாஶ பதா³ஹ்ருதாப்⁴யாஂ நானாவிமோஹாதி³ நிவாரிகாப்⁴யாம் ।
நமஜ்ஜனாபீ⁴ஷ்டததிப்ரதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 4 ॥

விளக்கம்: தாமரை போன்ற குருவின் பாதங்களை நோக்கி நம்மை அழைத்து செல்வதும்; வீண் ஆசைகளை அழித்து நம்மை தூய்மைப்படுத்துவதும்; துதிப்பவரின் எண்ணங்களை நிறைவேற்றும்; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ந்ருபாலி மௌலிவ்ரஜரத்னகான்தி ஸரித்³விராஜத் ஜ²ஷகன்யகாப்⁴யாம் ।
ந்ருபத்வதா³ப்⁴யாஂ நதலோகபங்கதே: நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 5 ॥

விளக்கம்: மன்னனின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கக்கல் போன்றது; முதலைகள் சூழ்ந்த நதியில் பிரகாசிக்கும் பெண் போன்றது; தன் பக்தனை அரசனாகவே ஆக்கும் சக்தி கொண்டது; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

பாபான்த⁴காரார்க பரம்பராப்⁴யாஂ தாபத்ரயாஹீன்த்³ர க²கே³ஶ்ர்வராப்⁴யாம் ।
ஜாட்³யாப்³தி⁴ ஸம்ஶோஷண வாட³வாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 6 ॥

விளக்கம்: இருண்ட பாவங்களை போக்கும் ஒளிரும் சூரியன் போன்றதும்; துன்பமெனும் நாகத்தை அழிக்கும் கருட ராஜனைப் போன்றதும்; கடல் போன்ற அஞ்ஞானத்தை எரித்து போக்கவல்ல தீ போன்றதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ஶமாதி³ஷட்க ப்ரத³வைப⁴வாப்⁴யாஂ ஸமாதி⁴தா³ன வ்ரததீ³க்ஷிதாப்⁴யாம் ।
ரமாத⁴வான்த்⁴ரிஸ்தி²ரப⁴க்திதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 7 ॥

விளக்கம்: சமாதி போன்ற ஆறு உயர்ந்த தன்மைகளை வழங்கவல்லதும்; பேரானந்த நிலையை சீடர்களுக்குத் தரவல்லதும்; என்றும் இறைவனின் திருவடியை நிலையாக வணங்கும் பக்தியைத் தரவல்லதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

ஸ்வார்சாபராணாஂ அகி²லேஷ்டதா³ப்⁴யாஂ ஸ்வாஹாஸஹாயாக்ஷது⁴ரன்த⁴ராப்⁴யாம் ।
ஸ்வான்தாச்ச²பா⁴வப்ரத³பூஜனாப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 8 ॥

விளக்கம்: எப்பொழுதும் தம் பணியில் ஈடுபட்டு; தொண்டாற்றும் சீடர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும்; நாடுபவர்களின் தன்னை உணர்தலுக்கு உதவி புரிவதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

காமாதி³ஸர்ப வ்ரஜகா³ருடா³ப்⁴யாஂ விவேகவைராக்³ய நிதி⁴ப்ரதா³ப்⁴யாம் ।
போ³த⁴ப்ரதா³ப்⁴யாம் த்³ருதமோக்ஷதா³ப்⁴யாஂ நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் ॥ 9 ॥

விளக்கம்: மோகம் என்ற பாம்பினை விரட்டும் கருடனைப் போன்றதும்; விவேகம், பற்றற்ற தன்மை போன்ற செல்வங்களை ஒருவருக்கு வழங்கவல்லதும்; ஞான அறிவினை ஒருவருக்கு ஆசிர்வதிப்பதும், தன்னை நாடுபவர்களுக்கு விரைவாக முக்திநிலையை தருவதுமான; என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்!!

 

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

Vanakkam! I'm Uma...


One thought on "குரு பாதுகா ஸ்தோத்திரம் (Guru Paduka Stotram)"

  1. மிகவும் அருமை எளிய நடையில் புரியுமாறு மொழி பெயர்த்து ஸ்தோத்ரம் கூற எளிதாக உள்ளது. தங்களது இப்பணி மேலும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Thiruchendurin Kadalorathil Senthil Nathan Arasangam Lyrics
  • ஜூலை 23, 2026
திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள்
Lord Vishunu Purusha Suktam
  • ஜூலை 9, 2026
புருஷ ஸூக்தம்: Purusha Suktam in Tamil
Dharma Sastha
  • ஜூன் 21, 2026
ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டோத்தர சதநாமாவளி