×
Saturday 26th of July 2025

பஜ கோவிந்தம்: ஆதி சங்கரர் அருளிய ஞான உபதேசம்


Last updated on ஜூலை 8, 2025

bhaja govindam lyrics tamil

Bhaja Govindam Lyrics in Tamil

ஆதி சங்கரர் அருளிய மிகவும் பிரசித்தி பெற்ற பஜ கோவிந்தம் என்ற ஞானப் பாடலின் ஸ்லோகங்கள், நிலையற்ற உலகப் பற்றுகளை நீக்கி, இறைவனைப் போற்றுவதன் அவசியத்தையும், உண்மை ஞானத்தின் தேவையையும் வலியுறுத்துகின்றன.

பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே .1

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம் .2

நாரீ ஸ்தன பரநாபீ தேசம்
த்ருஷ்ட்வா மா கா மோஹா வேசம்
ஏதத் மாம்ஸ வசா திவிகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம் .3

நளினீ தலகத் ஜலமதி தரலம்
தத் வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாதி அபிமான் க்ரஸ்தம்
லோகம் சோக ஹதம் ச சமஸ்தம் .4

யாவத் வித்தோ பார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே .5

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயோ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே .6

பால தாவத் க்ரீடா சக்த:
தருண தாவத் தருணீ சக்த:
வ்ருத்த தாவத் சிந்தா சக்த:
பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்த: .7

கா தே காந்தா க: தே புத்ர:
சம்சாரோ அயம் அதீவ விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத: .8

ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம்
நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்
நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: .9

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: கா சார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்சார: .10

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா .11

தினயாமின்யோ சாயம் ப்ராத:
சிசிர வசந்தோ புனராயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
ததபி ந முஜ்சதி ஆசா வாயு: .12

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி சஜ்ஜன் சங்கதிரேகா
பவதி பவார்னவதரனே நௌகா .13

ஜடிலோ முண்டீ லுஞ்ச்சித கேச:
காஷாயாம்பர பஹீத்ருத வேஷ
பச்யன்னபி சந பச்யதி மூட:
உத்ர நிமித்தோ பஹீத்ருத வேஷ: .14

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஜ்சதி ஆசா பிண்டம் .15

அக்ரே வன்னி: ப்ருஷ்டே பானு:
ராத்ரௌ சுபுக ஸமர்பித ஜானு:
காதல பிஷஸ் தருதல வாஸ:
ததபி ந முஞ்ச்சத் யாசா பாச: .16

குருதே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஸ தேன .17

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக: .18

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ .19

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா .20

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே .21

கஸ்த்வம் கோ அஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத:
இதி பரிபாவ்ய சர்வம் அசாரம்
விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் .22

த்வயீ மயி ச அன்யத்ரேகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாச்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம் .23

சத்ரோ மித்ரே புத்ரே பந்தோ
மா குரு யத்னம் விக்ரஹ சந்தொள
ஸர்வஸ்மின் அபி பஸ்ய ஆத்மானம்
ஸர்வத்ரோ ஸ்ருஜ பேதா ஞானம் .24

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா ஆத்மானம் பாவ்ய கோ அஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரக நிகூடா: .25

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் .26

சுகத: க்ரியதே ராமா போக:
பஸ்சாத் தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
தத் அபி ந முஜ்சதி பாபா சரணம் .27

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: .28

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா நித்ய விவேக விசாரம்
ஜாப்யசமேத சமாதி விதானம்
குர்வ வதானம் மஹத் அவதானம் .29

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம் .30

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
நாம ஸ்மரணாத் அன்ய உபாய
நஹி பஸ்யாமோ பவாப்தி தரனே .31


Bhaja Govindam Meaning in Tamil

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு. சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை. நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான். அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

அழகான பெண்களின் அழகிய கொங்கைகளையும் வயிற்றுப் பிரதேசங்களையும் பார்த்து மயக்க ஆவேசம் அடையாதீர்கள். இவையெல்லாம் புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள் மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது நிலையில்லாதது. அது போல வாழ்க்கையும் மிகவும் நிலையில்லாதது இந்த உலகில் எல்லாமும் எல்லாரும் வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள் மேலும் (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள் இதை நீ அறிவாய். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும் பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள். உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

யார் உனது துணைவி? யார் உனது புதல்வன்? இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது. நீ யாருக்கு உரியவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும். பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும். மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும். அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்? நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்? செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்? உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்? .மூடனே ஏன் இந்த நிலை உனக்கு? உனக்கு இவை நல்ல கதி இல்லை. மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே. பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

பகலும் இரவும்,மாலையும் காலையும், வாடையும் கோடையும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது. வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி சஜ்ஜன் சங்கதிரேகா
பவதி பவார்னவதரனே நௌகா

உனக்கு ஏன் மனைவி பற்றியும், செல்வம் பற்றியும் இவ்வளவு கவலை? பித்தனே! உனக்கு கட்டுப்படுத்துபவன் யாரும் இல்லையா? இந்த மூவுலகிலும் நல்லோரின் சங்கம் (கூட்டுறவு) ஒன்றே சம்சாரக் கடலைக் கடக்கும் படகாகும்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

ஜடிலோ முண்டீ லுஞ்ச்சித கேச:
காஷாயாம்பர பஹீத்ருத வேஷ
பச்யன்னபி சந பச்யதி மூட:
உத்ர நிமித்தோ பஹீத்ருத வேஷ:

சடை முடி தரித்தவன், மொட்டை அடித்தவன், முடியைப் பிடுங்கிக் கொண்டவன், காவி உடை அணிந்தவன் – இப்படி பல வேஷங்கள். பார்க்கும்போதும் அவன் (மூடன்) உண்மையைப் பார்க்கவில்லை. வயிறு நிரப்புவதற்காகவே இத்தகைய வேஷங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஜ்சதி ஆசா பிண்டம்

உடல் தளர்ந்து, தலை நரைத்துவிட்டது. பற்கள் இல்லாத வாய் ஆகிவிட்டது.
முதியவன் தடியைப் பிடித்துக் கொண்டு நடக்கிறான். அப்போதும் கூட ஆசை என்னும் பிண்டத்தை (பற்றை) அவன் விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

அக்ரே வன்னி: ப்ருஷ்டே பானு:
ராத்ரௌ சுபுக ஸமர்பித ஜானு:
காதல பிஷஸ் தருதல வாஸ:
ததபி ந முஞ்ச்சத் யாசா பாச:

முன்னால் நெருப்பு, பின்னால் சூரியன் (வெயிலில் அலைந்து திரிதல்). இரவில் கன்னங்கள் முழங்காலில் பதித்தபடி (குளிரில் சுருண்டு படுத்தல்). பிச்சை எடுத்து உண்டு, மரத்தடியில் வாழ்பவன். அப்போதும் கூட ஆசை என்னும் வலையை அவன் விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

குருதே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஸ தேன

கங்கைக்குச் செல்வது, கடல் யாத்திரை செய்வது, விரதங்களை அனுஷ்டிப்பது, அல்லது தானம் செய்வது – இவையெல்லாம் ஞானம் இல்லாதவர்களுக்கு எந்தப் பலனும் தராது. ஞானம் இல்லாதவன் எல்லா மதங்களின்படி முக்தி அடைவதில்லை, மீண்டும் பிறக்கிறான்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

கோயில் அல்லது மரத்தடியில் வாசம், பூமியில் படுத்து உறங்குதல், ஆடைகளற்ற நிலை. எல்லாவிதமான உடைமைகளையும், இன்பங்களையும் துறந்த நிலை. இத்தகைய வைராக்கியம் யாருக்கு ஆனந்தத்தை அளிக்காது? (அளிக்கும்)

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

யோகத்தில் ஈடுபட்டிருந்தாலும், போகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சேர்ந்திருந்தாலும், சேராதிருந்தாலும், யாருடைய மனம் பரம்பொருளில் (பிரம்மத்தில்) இன்பம் காண்கிறதோ, அவன் மகிழ்கிறான், மகிழ்கிறான், மகிழ்ந்தே இருக்கிறான்!

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா

பகவத் கீதையை சிறிதளவேனும் படித்தவன், கங்கை நீரின் ஒரு துளியையாவது குடித்தவன், ஒரு முறையாவது முராரியை (விஷ்ணுவை) வழிபட்டவன் – இத்தகையவனிடம் யமன் (மரண தெய்வம்) விவாதம் செய்வதில்லை (அவனை அஞ்சுவதில்லை).

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் உறங்குதல். இந்த உலக வாழ்க்கை கடக்க மிகவும் கடினமானது. அருள் கூர்ந்து, முராரியே (விஷ்ணுவே), என்னைக் கரையேற்றுவாயாக!

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

கஸ்த்வம் கோ அஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத:
இதி பரிபாவ்ய சர்வம் அசாரம்
விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்

நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனக்கு யார் தாய்? யார் தந்தை? என்று ஆராய்ந்து, இவை யாவும் நிலையற்றவை என்று உணர்ந்து, இந்த உலகை ஒரு கனவாகக் கருதி, அதைத் துறப்பாயாக.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

த்வயீ மயி ச அன்யத்ரேகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாச்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்

உன்னிலும், என்னிலும், மற்ற எல்லா இடங்களிலும் ஒரே விஷ்ணுவே உள்ளார். (உண்மையை அறியாமல்) என் மீது வீணாக கோபப்படுகிறாய். நீ எல்லா இடங்களிலும் சமமான மனதுடன் இரு. விரைவில் நீ விஷ்ணு நிலையை (இறைத் தன்மையை) அடைய விரும்பினால் (அப்படி இருப்பாய்).

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

சத்ரோ மித்ரே புத்ரே பந்தோ
மா குரு யத்னம் விக்ரஹ சந்தொள
ஸர்வஸ்மின் அபி பஸ்ய ஆத்மானம்
ஸர்வத்ரோ ஸ்ருஜ பேதா ஞானம்

பகைவன், நண்பன், மகன், உறவினர் – இவர்களிடம் வேறுபாடு காண முயற்சி செய்யாதே. அனைவருக்குள்ளும் ஒரே ஆன்மாவைக் காண்பாயாக. எல்லா இடங்களிலும் வேறுபாடு இல்லாத ஞானத்தை வளர்த்துக் கொள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா ஆத்மானம் பாவ்ய கோ அஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரக நிகூடா:

காமம், கோபம், பேராசை, மோகம் – இவற்றைத் துறந்து, “நான் யார்?” என்று உன் ஆன்மாவை ஆராய். ஆன்ம ஞானம் இல்லாத மூடர்கள், அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

கீதா ஸஹஸ்ரநாமத்தை (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளை) பாட வேண்டும். ஸ்ரீபதியின் (விஷ்ணுவின்) ரூபத்தை எப்போதும் தியானிக்க வேண்டும். நல்லோர்களின் சங்கத்தில் மனதை செலுத்த வேண்டும். ஏழைகளுக்கு செல்வத்தை (திறந்த மனதுடன்) தானம் செய்ய வேண்டும்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

சுகத: க்ரியதே ராமா போக:
பஸ்சாத் தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
தத் அபி ந முஜ்சதி பாபா சரணம்

இன்பம் தரும் என காம போகத்தில் ஈடுபடுகிறான். அதன் பிறகு, தளர்ந்த உடலில் நோய்கள் வருகின்றன. உலகில் மரணமே இறுதி அடைக்கலமாக இருந்தாலும், அப்போதும் கூட பாவம் செய்யும் வழியை (பழக்கத்தை) விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

செல்வம் என்பது துன்பத்திற்குக் காரணம் என்று எப்போதும் சிந்தி. அதிலிருந்து ஒரு துளி சுகம் கூட இல்லை என்பது உண்மை. செல்வந்தர்கள் தன் மகனால் கூட அஞ்சப்படுகிறார்கள் (செல்வத்திற்காக). எல்லா இடங்களிலும் இதுவே நடைமுறை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா நித்ய விவேக விசாரம்
ஜாப்யசமேத சமாதி விதானம்
குர்வ வதானம் மஹத் அவதானம்

பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்யாஹாரம் (புலனடக்கப் பயிற்சி), நித்தியமானதையும், நிலையற்றதையும் பகுத்தறியும் விவேகம், ஜெபத்துடன் கூடிய சமாதி நிலை – இவற்றை மிகுந்த கவனத்துடன் செய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

குருவின் தாமரை மலர் போன்ற பாதங்களில் முழுமையான பக்தியுடன் இரு. (அவ்வாறு இருந்தால்) உலகப் பற்றுகளிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.
புலன்களையும், மனதையும் கட்டுப்படுத்துவதன் மூலம், உன் இதயத்தில் இருக்கும் இறைவனைக் காண்பாய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
நாம ஸ்மரணாத் அன்ய உபாய
நஹி பஸ்யாமோ பவாப்தி தரனே

கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு! மூடனே, கோவிந்தனைப் போற்று! நாம ஸ்மரணை (இறை நாமத்தை உச்சரித்தல்) தவிர, இந்த சம்சாரக் கடலைக் கடக்க வேறு எந்த வழியையும் நான் காணவில்லை.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

 

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


17 thoughts on "பஜ கோவிந்தம்: ஆதி சங்கரர் அருளிய ஞான உபதேசம்"

  1. Slokas are not in chronological order and also all the slokas are not appearing. Only 13 slokas are found whereas there are 31 slokas. Meaning in tamil for slokas from 14 to 31 are not available. Please correct/modify. Thanking you.

  2. அத்புதம், ஆனந்தம்.
    பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
    கோவிந்தம் பஜ முடமதே.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  3. அருமை..பஜகோவிந்தம் தெரிநது கொண்டேன். தமிழ் விளக்கமும் தெரிந்துகொள்ள உதவிட இயலுமா..நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்