×
Saturday 1st of August 2026

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்


Last updated on மே 27, 2025

the don'ts in temple in tamil

The Don’ts in Temple in Tamil

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்

  • கோவிலில் தூங்கக் கூடாது..
  • தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது..
  • கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது..
  • விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது..
  • அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது..
  • குளிக்காமல் கோவில் போகக் கூடாது..
  • கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக் கூடாது..
  • கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது..
  • மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது..
  • கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது..
  • படிகளில் உட்காரக் கூடாது ..
  • சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது..
  • வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தரக் கூடாது..
  • மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது..
  • கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக் கூடாது..
  • கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது..
  • புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக் கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக் கூடாது..
  • கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது..
  • தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது..
  • சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது..
  • தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது..
  • எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது…

Read, also

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Erukkam Leaf & Flower Benefits
  • மே 4, 2026
எருக்கம் இலை மற்றும் பூக்களின் மருத்துவப் பயன்கள்
thirumuruga-kripananda-variyar-swamigal
  • டிசம்பர் 29, 2025
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
how-should-you-cross-a-temple-doorstep
  • செப்டம்பர் 5, 2025
கோவில்களின் வாசல் படியை எப்படி கடக்க வேண்டும்?