×
Friday 14th of August 2026

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோவில், புரசைவாக்கம்


purasawalkam-gangadeeswarar-temple

அருள்மிகு பங்கஜாம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோவில், புரசைவாக்கம்

சிவஸ்தலம் பெயர்அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோவில்
மூலவர்கங்காதரேசுவரர், வைத்தீஸ்வரர்
அம்மன்/தாயார்பங்கஜாம்பாள்
தல விருட்சம்புரசு மரம்
தீர்த்தம்கங்கா தீர்த்தம்
புராண பெயர்புரசுவனம், புரசைவாக்கம்
ஊர்புரசைவாக்கம்
மாவட்டம்சென்னை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

purasawalkam-gangadeeswarar-and-amman

தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பங்கஜாம்பாள் அம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோவில், புரசைவாக்கம், சைவ சமயத்தின் பழமையான தலங்களில் ஒன்றாகும். சுயம்பு சிவலிங்கத்தைக் கொண்ட இக்கோவில், சுந்தரரால் பாடல் பெற்ற வைப்புத்தலமாகவும், சென்னை பஞ்சபூத தலங்களில் ஜலத்தை (நீர்) குறிக்கும் ஆபத்தலமாகவும் புகழ்பெற்றது. கோவிலின் அமைப்பு பல்லவர் காலத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது.

purasawalkam-gangadeeswarar-temple-nandavanam

புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவில் வரலாறு

புராணக் காலத்தில் புரசு மரங்கள் அடர்ந்த காடாக இருந்த இவ்விடம் “புரசுவனம்” என அழைக்கப்பட்டது, பின்னர் “புரசைவாக்கம்” என மாறியது. கோவில் சுமார் 650 ஆண்டுகள் பழமையானது. 12ஆம் நூற்றாண்டு பிற்கால சோழர் காலக் கல்வெட்டுகளும், 15-16ஆம் நூற்றாண்டு விஜயநகர காலக் கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் நாட்டு திருவான்மியூர் உலகாளுடைய நாயனாருக்கு விளக்கு எரிப்பதற்காக நீலகங்கரையன் கொடையளித்ததைக் குறிப்பிடுகிறது. 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஸ்ரீவீரப்பிரதாப தேவராய மகா இராயர் பெயரைக் கொண்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள், கொங்கோன் அழகப்பெருமாள் போன்றோர் விளக்கு ஏற்றுதல், குடி அமர்த்தல், வரி, காணிக்கை ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

புரசைவாக்கம் தல புராணம்

சூரிய வம்சத்து அரசன் சகரன் (பகீரதன்) அஸ்வமேத யாகம் செய்தபோது, இந்திரன் வேள்விக் குதிரையை கவர்ந்து பாதாள லோகத்தில் கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தான். சகரனின் 60,000 மகன்கள் குதிரையைத் தேடி கபிலரைத் தாக்க, கபிலர் தவ வலிமையால் அவர்களை சாம்பலாக்கினார். சகரனின் பேரன் அம்சுமான், திலீபன், பகீரதன் ஆகியோர் கங்கையை பூமிக்குக் கொண்டு வர தவம் புரிந்தனர். சிவன் அருளால் கங்கை பூமிக்கு வந்தது; அதன் வேகத்தை தாங்க சிவன் சடையில் அடக்கி மெதுவாக விடுவித்தார். பாதாளத்திற்கு செல்லும் வழியில் கங்கையின் சில துளிகள் இங்கு விழுந்து கங்கா தீர்த்தத்தை உருவாக்கியது.

மற்றொரு கதை: பகீரதன் நாரத முனிவரை அவமதித்ததால் சாபமடைந்து, சாப நிவாரணத்திற்காக 1008 சிவலிங்கங்களை செதுக்கி நிறுவினான். கடைசியாக இங்கு புரசு மரத்தடியில் நிறுவிய லிங்கமே இத்தல மூலவர். இதனால் இறைவன் கங்காதரேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

purasawalkam-gangadeeswarar-temple-painting-1008th-lingam

கங்காதரேசுவரர் கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம். கொடிமரம், பலிபீடம், ரிஷபம். கர்ப்பக்கிரகம் சதுர வடிவம், அர்த்த மண்டபம், தூண்களுடன் மகாமண்டபம்; விமானம் சுதைச் சிற்பங்களுடன். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி.

உள் சுற்றில்: நால்வர், மகா கணபதி, நாகர், காசி விஸ்வநாதர், செக்கிழார், குலச்சிறை நாயனார், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர், ஊண்ட்றீஸ்வரர், மின்னோலி அம்மை, சண்முகர், துர்கை, பைரவர், பள்ளியறை, நடராஜர் சபை.

வெளிச் சுற்றில்: உற்சவர் மண்டபம் (63 நாயன்மார்களுடன்), சித்தி விநாயகர், வைத்தீஸ்வரர், பாலசுப்ரமணியர், குருந்த மல்லீஸ்வரர், சிம்ம வாகனம், சத்யநாராயணர், பாணலிங்கம், யாகசாலை, நவகிரகம், ராமலிங்க வள்ளலார்.

சுற்றுச் சுவர்களில் சிவலீலைகள்: ஆனந்த தாண்டவம், யமனை உதைத்தல், திரிபுர சம்ஹாரம், ராவணன் கைலாசம் தூக்குதல், காரைக்கால் அம்மையார் தரிசனம்.

சிற்பங்கள்: பகீரதன் நாரத அவமதிப்பு, சிவ வழிபாடு, கங்கை சடை விடுதல். தென் கிழக்கு குளம்.

purasawalkam-gangadeeswarar-temple-urchavar

புரசைவாக்கம் கோவில் சிறப்பு

இத்தலம் சென்னை பஞ்சபூத தலங்களில் நீரைக் குறிக்கும் ஆபத்தலம்.

பஞ்சபூத தலங்கள்:

  • அருணாசலேஸ்வரர் (தீ – சவுகார்பேட்டை)
  • ஏகாம்பரேஸ்வரர் (பூமி – சவுகார்பேட்டை)
  • காளஹஸ்தீஸ்வரர் (காற்று – பாரிஸ்)
  • சிதம்பரேஸ்வரர் (வெளி – சூளை)
  • கங்காதரேசுவரர் (நீர் – புரசைவாக்கம்).

சிறப்புகள்: மனோன்மணி லிங்கம், உச்சிஷ்ட கணபதி, சத்யநாராயணர், வள்ளலார் ராமலிங்க அடிகள் சன்னதிகள். கோவில் வளாகத்தில் அரிதான குருந்தை மரம் உள்ளது; மாணிக்கவாசகர் இம்மரத்தடியில் உபதேசம் செய்தார்.

purasawalkam-gangadeeswarar-temple-painting-parkadal

புரசைவாக்கம் கோவில் திருவிழாக்கள்

புரசைவாக்கம் கோவில் திறக்கும் நேரம்

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

கங்காதரேசுவரர் கோவிலுக்கு எப்படிச் செல்வது?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் காந்தி இர்வின் சாலை – நாயர் சாலை – டாக்டர் அலகப்பா செட்டியார் சாலை – கங்காதீஸ்வரர் கோவில் சாலை வழியாக செல்லலாம். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. புரசைவாக்கம், எழும்பூர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

purasawalkam-gangadeeswarar-temple-painting-kannapa-nayanar

புரசைவாக்கம் கோவில் முகவரி

அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோவில்,
புரசைவாக்கம்,
சென்னை – 600084.

தொடர்பு எண்: 📞 +91-44-26422487

இதைப் பதிவேற்றியவர்..

Umamaheswari Sivanesan

Vanakkam! I'm Uma...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

actor-arjun-temple-anjaneyar
  • ஆகஸ்ட் 1, 2026
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் [Actor Arjun’s Anjaneyar Temple in Tamil]
poonamallee-vaitheeswaran-temple-gopuram
  • ஜூன் 29, 2026
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் திருக்கோவில் [செவ்வாய் ஸ்தலம்]
Nageshwara Swamy Temple Kundrathur
  • ஜூன் 13, 2026
அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோவில், குன்றத்தூர்