×
Sunday 27th of July 2025

நமசிவாய என உச்சரிப்பதன் பலன் நல்வினை


Last updated on மே 28, 2025

K-62A

கா-62எ (K-62A) என்ற அடையாள எண் உடைய முத்திரை ஒன்று சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் ஒன்றான காளிபங்கன்-இல் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை தற்போது இந்திய அரசு, புதுடெல்லி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த முத்திரையின் நிழல் படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி. ஐ. எஸ், ஐ தொகுப்பு 1, பக்கம் 310 – லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 374 – லும் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த முத்திரையை பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ், காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியாவது,

நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 7 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-ஆவது எழுத்து 3-ஆவது எழுத்துடனும், 4-ஆவது எழுத்து 5-ஆவது எழுத்துடனும், 6-ஆவது எழுத்து 7-ஆவது எழுத்துடனும் இணைந்துள்ளன.

இந்த முத்திரை வலமிருந்து இடமாக, ப + (ஞ் + சா) + ( ட் + ச ) + (ரு + ள்). பஞ்சாட்சருள் என்பது பஞ்சாட்ச(ர) (அ)ருள் எனப் படிக்கப்படுகிறது.

இதிலுள்ள எழுத்துக்களில், ‘ப’ என்பது 9-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ஞ்’ என்பது 4-ஆவது மெய் எழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ட்’ என்பது 5-ஆவது மெய் எழுத்து, ‘ச’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ரு’ என்பது 12-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ள்’ என்பது 16-ஆவது மெய் எழுத்து ஆகியவை ஆகும்.

பஞ்சாட்ச(ர) (அ)ருள்

பஞ்சாட்ச(ர) என்னும் பஞ்சாட்சரம் என்பதற்கு நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளான சிவபிரானை அதிதெய்வமாக கொண்ட மந்திரம் எனவும், அருள் என்பதற்கு பொழிவு, கருணை, நல்வினை (முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல்), ஏவல், சிவசக்தி எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.

பொருள்: நமசிவாய என உச்சரிப்பதன் பலன் நல்வினை

இந்த முத்திரையின் வாயிலாக சிந்து சமவெளி நாகரிக மக்கள் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து அருள்மிகு சிவபிரானை வணங்கி வழிபட்டுள்ளனர் என்பதும், அவ்வாறு உச்சரிப்பதன் பலன் நல்வினை என்னும் முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல் என்பதையும் நன்கு அறிந்துணர்ந்து உள்ளனர் என்பதும் தெரியவருவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Also, read: நமசிவாய என உச்சரிப்பதன் நல்வினை பிறவிநீக்கமே

Thanks:

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose
karaikudi kasi sri kaalai rasan
காரைக்குடி, முனைவர் காசி ஸ்ரீ காளைராசன்

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

about azhinjil tree indus valley civilization
  • மார்ச் 29, 2025
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
H-2204A,B&C
  • மார்ச் 29, 2025
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
M-1098A
  • மார்ச் 28, 2025
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்